shadow

பிப்ரவரியில் சிவகார்த்திகேயனின் இரண்டு படங்கள்

பிப்ரவரியில் சிவகார்த்திகேயனின் இரண்டு படங்கள்இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் பிப்ரவரி இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் தொடக்கவிழாவும் பிப்ரவரியில் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே. 15 படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரியில் துவங்க இருப்பதாகவும், இதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவும் அறிவிக்காப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகவிருக்கும் இந்த படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

 

Leave a Reply