பின்லேடன் மகன் கொல்லப்பட்டார்: உறுதி செய்த அமெரிக்க அதிபபர்

அல்கொய்தா தலைவர் பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்கொய்தா தலைவர் பின்லேடன் கடந்த 2011ஆம் ஆண்டு அமெரிக்க படையினர்களால் பாகிஸ்தானில் கொல்லபப்ட்டார்.

பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து அல்கொய்தா தலைமை பொறுப்பை அவரது மகன் ஹம்சா பின்லேடன் ஏற்றார். இந்த நிலையில் பின்லேடன் மகனை கொல்ல அமெரிக்க படைகள் தீவிரமாக இருந்ததை அடுத்து இன்று ஹம்சா பின்லேடனும் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Leave a Reply