பிக்பாஸ் பைனல் குறித்து மதுமிதாவின் திடுக்கிடும் குற்றச்சாட்டு

சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் பைனல் நிகழ்ச்சி பெரும் வரவேற்ப்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்ச்சியில் முகின் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். சாண்டி இரண்டாமிடமும் லாஸ்லியா மூன்றாம் இடமும் பெற்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் மதுமிதா மற்றும் சரவணன் தவிர மீதி 14 போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சரவணன் மற்றும் மதுமிதா ஆகிய இருவரும் சர்ச்சைக்குரிய முறையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதால் தான் இருவருக்கும் பைனல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிகிறது

இருப்பினும் மதுமிதாவின் கணவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது போன்ற காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. இதனால் மதுமிதாவின் கணவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்று செய்திகள் வெளியாகின

இந்த நிலையில் இதற்கு மதுமிதாவும் மற்றும் அவரது கணவரும் மறுப்பு தெரிவித்துளனர். பிக்பாஸ் பைனல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் எனவே நாங்கள் இருவருமே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் எனது கணவர் கலந்து கொண்ட பழைய வீடியோவை இந்த நிகழ்ச்சியுடன் இணைத்து ஒளிபரப்பி உள்ளதாகவும் திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை மதுமிதா தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு சேனல் தரப்பில் என்ன என்ன விளக்கம் தர இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply