பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது இடம் யாருக்கு? ஸ்ருதியாசன் அதிர்ச்சி அறிவிப்பு

#பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி முதலில் மூன்றாவது இடம் பிடிப்பவரை அறிவித்துவிட்டு அதன்பின்னர் வின்னர் பெயரை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்ராவது இடம் பிடித்தவர் யார் என்பதை ஸ்ருதிஹாசன் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு சென்று அறிவிக்கவுள்ளார்.

இப்படி ஒரு கடினமான பணியை தன்னிடம் கொடுத்ததற்காக தந்தை கமலிடம் செல்லமாக கடிந்து கொண்ட ஸ்ருதிஹாசன் அதன்பின் பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறார். அவரை சிறப்பாக சாண்டி, லாஸ்லியா மற்றும் முகின் வரவேற்கின்றனர்.

அதன் பின்னர் 3வது இடத்தை பிடித்தவரின் பெயரை ஸ்ருதிஹாசன் அறிவிக்கின்றார். மூன்றாமிடம் லாஸ்லியாவுக்கு கிடைத்துள்ளது. இந்த அறிவிப்பு லாஸ்லியாவுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது

Leave a Reply