பா.ரஞ்சித்-தினேஷ் இணைந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு
ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடித்த ‘அட்டக்கத்தி’ திரைப்படம் நல்ல ஹிட்டாகிய நிலையில் தற்போது ரஞ்சித் தயாரிப்பில் தினேஷ் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்தில் நடித்து வருகிறார். பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கும் இந்த படத்தில் தினேஷூக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முடிவடைந்தது இதனையடுத்து இன்று படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
தென்மா இசையில் கிஷோர் குமார் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் அடுத்த வாரம் தொடங்கப்படடும் என்றும் இந்த படம் வரும் மே மாதம் ரிலீசாகும் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.