பா.ஜ.க. வேட்பாளருக்கு 14 நாள் சிறை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு மக்களவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடும் பிரகாஷ்பாபு என்பவரை 14 நாள் சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் சபரிமலை வன்முறை வழக்கின் விசாரணை நடந்து வரும் நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கேரளாவில் கோழிக்கோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருக்கு 14 நாள் காவல் என பத்தனம்திட்டா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பாஜக வேட்பாளருக்கு காவல் என்ற தகவல் அக்கட்சியினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply