பாலியல் புகார் வழக்கு: முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்!

பாலியல் புகார் வழக்கில் கைதான சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த முகிலன் என்ற சமூக ஆர்வலர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முகிலன் திடீரென மாயமானார். அதன்பின்னர் 5 மாதத்திற்கு பிறகு திருப்பதியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் சிறை வைக்கப்பட்ட முகிலன், ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மாயமான காலத்தில் முகிலன் எங்கிருந்தார்? என தெரிவிக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு பதிலளித்த முகிலன் தரப்பு வழக்கறிஞர் போலீசார் முகிலன் மீது வேண்டுமென்ற பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக தெரிவித்து பதில் மனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் இன்று முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply