shadow

பாலகோட் தாக்குதலில் பலியான தீவிரவாதிகள் எண்ணிக்கை எவ்வளவு? கபில்சிபல் கேள்வியால் பிரதமர் தர்மசங்கடம்

பாலகோட் தாக்குதலில் 300 தீவிரவாதிகள் பலியானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் இதனை சர்வதேச பத்திரிகைகள் செய்தியாக வெளியிடாதது ஏன் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தானின் பாலகோட் உட்பட 4 பகுதிகளில் இந்திய விமானப்படை, ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதலில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் இதுகுறித்து தனது டுவிட்டரில் பக்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறியபோது, ‘நியூயார்க் டைம்ஸ், தி டெய்லி டெலிகிராப் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களின் பெயர்களை குறிப்பிட்டு, இந்த ஊடகங்களில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஆதாரத்துடன் செய்தி வரவில்லையே, அது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்வியால் பிரதமர் மோடியின் தரப்பு தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply