பாலகிருஷ்ணரெட்டி பரப்புரை செய்ய தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
ஓசூர் வேட்பாளர் ஜோதிக்கு ஆதரவாக அவரது கணவர் பாலகிருஷ்ணரெட்டி பரப்புரை செய்ய தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
ஓசூர் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த பாலகிருஷ்ணரெட்டி சமீபத்தில் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக எம்.எல்.ஏ பதவியை இழந்தார்.
இந்த நிலையில் அதே தொகுதியில் அவரது மனைவி ஜோதி போட்டியிடும் நிலையில் அவருக்கு ஆதரவாக பாலகிருஷ்ணரெட்டி பரப்புரை செய்தார். இதுகுறித்து அமமுக வேட்பாளர் புகழேந்தி மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் பாலகிருஷ்ணரெட்டி பரப்புரை செய்ய தடையில்லை என்று கூறியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.