பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை: தமிழிசை கண்டனம்
கும்பகோணம் அருகே திருபுவனத்தில் மதமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் கேட்டரிங் ஏஜென்ட் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த கொலையை கண்டித்து தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது;
திருபுவனத்தில்..மதமாற்றத்தைத்தடுத்து..இந்துமத உணர்வுகளை நியாயமாக எடுத்துரைத்த. பா ம க வைச்சார்ந்த சகோதரர் ராமலிங்கம் அடுத்தநாளே, அநியாயமாக்க் கொல்லப்ட்டிருப்பது.. நெஞ்சை உலுக்குவதாக. உள்ளது.. செய்தி கேட்ட உடனே தஞ்சை மாவட்டத்தலைவரை தொடர்பு கொண்டேன், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
இது தனிப்பட்ட சம்பவமாக்க்கருதப்படாமல்..மதச்சார்பற்ற தன்மை என்ற வெளிப்பூச்சோடு..இந்துமதம், இந்து மதச்சகோதர்ர்கள் எந்த அளவிற்கு வஞ்சிக்கப்படுகிறார்களென்பதை இந்த சமூகம் எவ்வளவு இலகுவாக புறந்தள்ளிக் கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்து சமூகத்திற்கு புரியவைக்க வேண்டிய கடமை உள்ளது. இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.