shadow

பாமகவில் இருந்து விலகிய பிரபல நடிகர்: அதிமுக கூட்டணியில் அதிரடி முடிவு

பாமக துணை தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட நடிகர் ரஞ்சித் சற்றுமுன் அந்த பதவியை ராஜினாமா செய்தார்

பாமக இணைத்து கொண்டதில் வேதனை அடைகிறேன் என்றும், மதுக்கடைக்கு எதிராக போராடியர்கள் எப்படி மதுக்கடை நடத்துபவர்களிடம் கூட்டணி வைத்துள்ளனர் என்றும் ரஞ்சித் கேள்வி எழுப்பினார்.

தொண்டர்களை ஆலோசித்துத்தான் கூட்டணி வைத்ததாக அன்புமணி கூறியதைக் கேட்டால் சிரிப்புதான் வருகிறது என்றும், எந்தத் தொண்டர்களைச் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசினார்? என்றும் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக அமைச்சர்கள் அனைவர் மீதும் ஊழல் சொல்லிவிட்டு அவர்களுடன் எப்படி கூட்டு சேர முடிகிறது? என்றும் ரஞ்சித் மூன்றாவது கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

இந்த கேள்விகளுக்கு பாமக தரப்பினர் என்ன பதில் சொல்கின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply