shadow

பானுப்ரியா மீது புகார் கூறிய சிறுமியின் தாயார் கைது!

நடிகை பானுப்ரியா வீட்டில் ஆந்திராவை சேர்ந்த சிறுமி ஒருவர் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், அந்த சிறுமிக்கு பானுப்ரியா வீட்டில் உள்ளவர்கள் பாலியல் உள்பட பல தொல்லைகள் கொடுத்ததாகவும் ஒரு வருடமாக சிறுமிக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்றும் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் குழந்தைகள் நல அமைப்பு சிறுமியை மீட்டு சென்னையில் உள்ள சிறார் இல்லத்தில் தங்க வைத்திருந்தனர்.

இந்த நிலையில் தன்னுடைய வீட்டில் வேலை செய்த சிறுமி தனது வீட்டில் உள்ள பொருட்களை திருடி அவருடைய தாயாரிடம் கொடுத்ததாகவும், இதுகுறித்து தான் கண்டித்தபோது பொருட்களை திருப்பி தர சம்மதம் தெரிவித்ததாகவும் பானுப்ரியா தரப்பினர் புகார் கொடுத்தனர்.

இந்த புகார் விசாரணையில் இருந்தபோது சிறுமியை பார்க்க சென்னையில் உள்ள சிறார் இல்லத்திற்கு வந்திருந்த அவருடைய தாயாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

 

Leave a Reply