பாஜகவை கண்டு அஞ்சுவது உண்மைதான்: திருமாவளவன்
பாஜக பலமான கட்சி என்பதும் அந்த கட்சியை பார்த்து இந்தியாவில் உள்ள ஜனநாயக கட்சிகள் அனைத்தும் அஞ்சுவது உண்மைதான் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
பாஜக பலமான கட்சியாக இருப்பதால்தான் மத்தியில் ஆட்சியில் இருக்கின்றது என்றும், ஆனால் அதே நேரத்தில் மதவாத, ஜனநாயகத்திற்கு விரோதமாக இருக்கின்றார் என்பதால் அந்த கட்சியை தாங்கள் எதிர்ப்பதாகவும் திருமாவளவன் மேலும் கூறினார்.
பாஜக ஆபத்தான கட்சியா? என்ற கேள்விக்கு பதிலளிக்காமல், பாஜக வலிமையான கட்சி என்று பதில் கூறி செய்தியாளர்களின் கேள்வியை ரஜினிகாந்த் திசை திருப்பியதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.