shadow

பாஜகவுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை: திருநாவுக்கரசர்

வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட தமிழக அரசியல் கட்சிகளுடன் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக முயற்சித்து வரும் நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், ‘கூட்டணிக்கான கதவை பிரதமர் மோடி திறந்துவைத்தாலும் அந்த கதவிற்குள் செல்ல யாரும் தயாராக இல்லை என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு சில கட்சிகள் காங்கிரசுடன் கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகத்தில், திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளதாகவும், விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் திருநாவுக்கரசர் குறிப்பிட்டார்.

கோடநாடு விவகாரத்தை முதலமைச்சர் சட்ட ரீதியாக சந்திக்க வேண்டும் எனவும், அதற்கு மாறாக புகார் கூறியவர்களை கைது செய்வது ஏற்புடையதல்ல எனவும் கூறிய திருநாவுக்கரசர் கோடநாடு விவகாரத்தில் சி.பி.ஐ அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 

Leave a Reply