shadow

பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் அதிருப்தியா? பொன் ராதாகிருஷ்ணன் பதில்

மக்களவை தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது எந்த வகையிலும் அதிருப்தியை ஏற்படுத்தவில்லை என மத்திய இணையமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வரும் மக்களவை தேர்தலுக்காக தமிழகத்தில் அதிமுக-பாஜக-பாமக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் மார்ச் 6ம் தேதிக்குள் அதிமுக கூட்டணி இறுதி வடிவம் பெறும் என்றும் இழுபறியில் உள்ள தேமுதிக குறித்த தகவல் விரைவில் சாதகமாக வரும் என்றும் பொன் இராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Leave a Reply