shadow

பாஜகவுக்கு திமுக சார்பில் நன்றி: மு.க.ஸ்டாலின் கூறியது ஏன்?

அறிஞர் அண்ணா பெயரை பயன்படுத்தி அரசியல் செய்யும் நிலைமைக்கு பாஜக வந்துவிட்டதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அண்ணா தற்போது இருந்திருந்தால் பாஜகவில் இணைந்திருப்பார் என்ற முரளிதர ராவின் கருத்து குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், ‘அண்ணாவின் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்ய வேண்டிய சூழ்நிலை பா.ஜ.கவிற்கு வந்துள்ளது. அண்ணாவை மனதில் வைத்து நினைவுபடுத்தியதற்காக திமுக சார்பில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

3 வருடமாக மோடியின் தலைமையில் இயங்கி வரும் இந்த பாஜக ஆட்சி எதையும் செய்யவில்லை, எந்த பலனும் மக்களுக்கு கிடைக்கவில்லை. அதையெல்லாம் திசைதிருப்பும் வகையில் தான் இப்படிப்பட்ட பிரச்சாரத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

டெங்கு காய்ச்சலுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். குட்கா விவகாரத்தில் அமைச்சர் மற்றும் காவல்துறை உயர்அதிகாரிகளுக்கு எதிரான திமுகவின் வழக்கில் நீதிமன்றத்தில் நியாம் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.

Leave a Reply