shadow

பாஜகவுக்கு ஓட்டு போட்டால் பாகிஸ்தானை துண்டாடுவோம்: சுப்பிரமணியன் சுவாமி

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டு போட்டால் பாகிஸ்தானை நான்கு துண்டுகள் ஆக்குவோம் என்று சுப்ரமணிய சாமி கூறியுள்ளார்.

சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் இன்று விடுதலையாகி இந்தியாவுக்கு திரும்பவுள்ளார். அவரை வரவேற்க வாகா எல்லையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காத்திருக்கின்றனர்

இந்த நிலையில் பா.ஜ.க-வின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி அளித்த பேட்டி ஒன்றில், ‘வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைவர்கள் அனைவரும் இதை வைத்து தான் ஓட்டு கேட்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானுக்கு சரியான பாடம் கற்பிப்போம் என்று உறுதியளிக்க வேண்டும் என்பதை “எங்களுக்கு திரும்பவும் அதிகாரம் கொடுத்தால் பாகிஸ்தானை நான்கு துண்டுகள் ஆக்குவோம் என்று மக்கள் முன்பாக கூற வேண்டும் ” என்று கூறியுள்ளார்.

Leave a Reply