பாஜகவுக்கு ஓட்டு கேட்காத கங்கை அமரன்: அதிர்ச்சியில் தமிழிசை
கடந்த முறை ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது பாஜக வேட்பாளராக போட்டியிட்ட கங்கை அமரன், இந்த முறை உடல்நிலையை காரணம் காட்டி போட்டியிட மறுத்துவிட்டார். இந்த நிலையில் சற்றுமுன்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கங்கை அமரன், இந்த தேர்தலில் யார் நல்லது செய்வார்கள் என்பதை யோசித்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று பொதுவாக கூறியுள்ளார்.
பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருந்து பாஜகவுக்கு வாக்கு கேட்காமல் இப்படி பொதுவாக கூறிய கங்கை அமரனை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். கங்கை அமரனின் இந்த பேச்சு தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன
மேலும் ஆர்.கே.நகரில் இந்த முறையும் பணப்பட்டுவாடா அதிகளவில் நடந்து வருவதாகவும், எனவே இந்த முறையும் தேர்தல் நிறுத்தப்பட்டால் நல்லதுதான் என கங்கை அமரன் கூறியது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.