shadow

பாஜகவுக்கு எதிராக ஓரணியில் இணைந்துள்ளோம்: ராகுல்காந்தி

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணையும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

நேற்று டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக, தெலுங்கு தேசம், உள்பட இந்தியாவின் முக்கிய கட்சிகள் பல கலந்து கொண்டன. இந்த நிலையில் இந்த மெகா கூட்டணி கூட்டம் முடிந்தபின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

வலுவான கூட்டணியை உருவாக்கி, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்துவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சிகள், ஓரணியில் இணைந்துள்ளதாகவும், பாஜகவிடம் இருந்து நாட்டை மீட்பதே, தங்களின் நோக்கம் என்றும் ராகுல்காந்தி கூறினார்.

 

Leave a Reply