பாஜகவில் சேர்ந்ததால் வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளர்

உத்தரபிரதேச மாநிலத்தில் அலிகார் என்ற பகுதியில் ஒரு முஸ்லீம் குடும்பம் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அந்த வீட்டில் உள்ள ஒரு பெண் பாஜகவில் இணைந்தார். இதுகுறித்த செய்திகள் வெளிவந்து அந்த தெருவை பரபரப்புக்கு உள்ளாக்கியது

இந்த நிலையில் அந்த பெண் பாஜகவில் இணைந்த செய்தி அறிந்த அந்த வீட்டின் உரிமையாளர் உடனே வீட்டை காலி செய்யும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். காரணம் கேட்டதற்கு பாஜகவில் இருப்பவர்களுக்கு தனது வீட்டில் இடமில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து போலீஸ் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது

 

Leave a Reply