shadow

பாக்யராஜ் ராஜினாமாவை ஏற்க மாட்டோம்: எழுத்தாளர்கள் சங்கம் அறிவிப்பு

விஜய் நடித்த ‘சர்கார்’ கதை பிரச்சனையில் வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பாக்யராஜ் முடிவு எடுத்ததால் அவர் மீது ‘சர்கார்’ படக்குழு அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவியை பாக்யராஜ் இன்று மதியம் திடீரென பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா குறித்து அவர் விளக்கமளித்து ஒரு அறிக்கையையும் வெளியிட்டார்

இந்த நிலையில் பாக்யராஜின் ராஜினாமாவை எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஏற்று கொள்ள மறுத்துவிட்டடனர். இதுகுறித்து எழுத்தாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: `ராஜினாமா கடிதத்தை அனைத்து உறுப்பினர்களிடம் தெரிவித்தோம். அனைவரும் ஒருமனதாக ராஜினாமாவை ஏற்க மறுத்துவிட்டனர். நிர்வாகிகள் முதல் செயற்குழு உறுப்பினர்கள் வரை நீங்களே தலைவராகத் தொடர வேண்டும் என விரும்புகின்றனர். அவர்களது முடிவையே தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம். எனவே, எப்போதும் போல நீங்களே எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகத் தொடர்வீர்கள் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply