shadow

பாகிஸ்தான் ராணுவத்தின் தலையாட்டி பொம்மைதான் இம்ரான்கான்: முன்னாள் மனைவி பேட்டி

சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி 115 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற இன்னும் ஒருசில எம்.பிக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அந்த ஆதரவை திரட்டும் முயற்சியில் அக்கட்சியினர் ஈடுபட்டுள்ள நிலையில், இம்ரான் கானின் முன்னாள் மனைவியும், பத்திரிகையாளருமான ரேஹம் கான், இந்திய நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இந்த பேட்டியில் பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று தனக்கு ஏற்கனவே தனக்கு தெரியும் எனவும் தேர்தல் முறையாகவும், நியாயமாகவும் நடந்திருந்தால் இம்ரான் வெற்றி பெற்றிருக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தற்போதைய சூழ்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தால் ஆட்டி வைக்கப்படும் தலையாட்டி பொம்மையாகத்தான் இம்ரான்கான் இருக்க முடியும் என்றும், ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் இம்ரான்கான் நடந்தாக வேண்டும் எனவும் ரேஹம் கான் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply