மூன்றாவது டெஸ்ட் டிரா
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று முடிவுக்கு வந்த நிலையில் இந்த போட்டி டிரா ஆகியது
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 583 ரன்களும் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 273 ரன்களும் எடுத்தன, இதனை அடுத்து பாகிஸ்தான் அணி ஃபாலோ ஆன் ஆகி மீண்டும் பேட்டிங் செய்தது. 100 ரன்களுக்கு இரண்டு விக்கெட்கள் விழுந்திருந்த நிலையில் நான்காவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது
இந்த நிலையில் நேற்று 5-வது நாள் ஆட்டம் தொடங்க இருந்தது. ஆனால் மழை காரணமாக போட்டி தாமதமாகவே தொடங்கியதால் இந்த போட்டி டிராவில் முடிந்தது
ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
ஆட்டநாயகனாக நியமனம் ஜாக் கிராலே தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக பட்லர் மற்றும் முகமது ரிஸ்வான் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.