shadow

பழனிச்சாமி செய்த பாவங்கள் அக்னிகுண்டத்தில் இறங்கினாலும் போகாது: பிரேமலதா

அக்னி குண்டத்தில் இறங்கினாலும், முதல்வர் பழனிசாமி செய்த பாவங்கள் போகாது என்று தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதா கூறியுள்ளார்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களை, தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், புஷ்கரா விழாவில் காவிரி ஆற்றில் நீராடிய முதல்வர், நுரை பொங்கும் நொய்யல் ஆற்றில் கால் வைப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், எடப்பாடியார் அக்னி குண்டத்தில் இறங்கினாலும், அவர் செய்த பாவங்கள் போகாது என்றும் கடுமையாக விமர்சித்தார்.

Leave a Reply