பள்ளிகளில் காலையிலும் சத்துணவு திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என தகவல்

தமிழக பள்ளிகளில் மதியம் சத்துணவு திட்டம் அமலில் இருந்து வரும் நிலையில் விரைவில் காலையிலும் சத்துணவு திட்டம் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது

சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில், பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தையும் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்து வரும் 14ஆம் தேதி தாக்கல் ஆகவுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்தான உணவின் தேவையை முன்னிட்டு காலையில் வழங்கப்படும் சத்துணவு சிறப்பானதாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply