shadow

பல்வலியால் மருத்துவமனையில் அட்மிட் ஆன பெண் திடீர் மரணம்!

இங்கிலாந்தை சேர்ந்த ராச்செல் ஜான்ஸ்டன் என்ற 49 வயது மாற்றுத் திறனாளி பெண் ஒருவருக்கு பற்கள் அனைத்தும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. எனவே ஒர்செஸ்டெர்ஷைரில் உள்ள பல் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்ய முடிவெடுத்தார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருடைய குடும்பத்தினர்களின் அனுமதியை பெறாமல் அனைத்து பற்களையும் ஒரே நேரத்தில் பிடுங்கியுள்ளனர். இதனால் அவர் டிஸ்சார்ஜ் ஆன சில மணி நேரங்களில் சுய நினைவை இழந்துள்ளார். உடனே அவரை மீண்டும் உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு 10 நாட்கள் சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார்.

இதுகுறித்து ஒர்செஸ்டெர்ஷைர் மருத்துவக் குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply