பறக்கும் படையினர் பறிமுதல் செய்த 25 கிலோ தங்கம் யாருக்கு சொந்தம்?
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சாலையில் செல்லும் வாகனங்களை சோதனை செய்து உரிய ஆவணங்கள் இல்லாத கோடிக்கணக்கான ரூபாய்களையும் தங்கம் வெள்ளி பொருட்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்
அந்த வகையில் சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் உரிய ஆவணமின்றி வேனில் கொண்டு செல்லப்பட்ட 27 கிலோ தங்கம் மற்றும் 15 கிலோ வெள்ளியை தேர்தல் பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி நகைகள் சென்னை தி.நகரில் உள்ள ஒரு பிரபல நகைக்கடைக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.