பரோல் முடிகிறது. இன்று மீண்டும் சிறை செல்லும் நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேர்களில் ஒருவர் நளினி. சிறைக்கு சென்றபோது கர்ப்பமாக இருந்த நளினி, குழந்தை பெற்று தற்போது அந்த குழந்தை திருமண வயதை எட்டியதை அடுத்து மகளின் திருமணத்திற்காக அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது.

நளினி தனது பரோல் காலத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் நளினிக்கு வழங்கப்பட்டிருந்த பரோல் இன்று நிறைவடைய உள்ளது. இதனையடுத்து இன்று மாலை மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

இருப்பினும் நளினி பரோலில் வெளியே எதற்காக வந்தாரோ அது நிகழவில்லை. தனக்கு இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்றும், தனது தந்தையும் தாயும் விடுதலை ஆனபின்னரே திருமணம் செய்து கொள்வேன் என்றும் நளினியின் மகள் உறுதியாக கூறிவிட்டதை அடுத்து இன்று நளினி ஏமாற்றத்துடன் சிறை திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply