பரபரப்பை ஏற்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரே ஒரு டுவீட்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் உட்பட பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன்

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்தில் முடிவடைந்து விரைவில் அடுத்த கட்டப்படப்பிடிப்பு தொடங்கவுள்ளது

இந்த நிலையில் இந்த படத்திற்காக சில ஸ்டில்களை அட்டகாசமாக எடுத்த ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் அந்த ஸ்டில்களை ஆர் ரஹ்மானுடன் பகிர்ந்துள்ளார்

இந்த ஸ்டில்களை பார்த்து தான் ஆச்சரியமும் அதிசயமும் அடைந்ததாக ஏ.ஆர்.ரஹ்மான், தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவீட் பொன்னியின் செல்வன் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply