பத்ம விருதுகளுக்கு தகுதியானவர்கள் யார்? பொதுமக்களிடம் ஐடியா கேட்கும் அமித்ஷா
பத்ம விருதுகளுக்கு தகுதியுடைய தனி நபர்களின் பெயர்களை பரிந்துரைக்குமாறு பொதுமக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்..
பொதுமக்கள் பத்ம விருதுக்கு தகுதியானவர் என்று முடிவு செய்பவர்களின் பெயர்களை வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் //padmaawards.gov.in என்ற இணையதளத்தில் பரிந்துரைக்குமாறு அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.
பத்ம விருதுகள் தகுதியானவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும், ஒருசிலருக்கு தாமதமாக வழங்கப்படுவதாகவும் கடந்த சில ஆண்டுகளாக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அமித்ஷாவின் இந்த ஐடியாவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.