பதிவு செய்ய விண்ணப்பிக்காத விடுதிகள் மீது நடவடிக்கை

சென்னையில் பதிவு செய்யாத விடுதிகள் அதிக அளவில் இயங்குவதாக வந்த புகாரை அடுத்து உடனடியாக அனைத்து விடுதிகளும் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது

இந்த நிலையில் சென்னை ஆட்சியர் சண்முகசுந்தரம் இதுகுறித்து கூறியபோது, ‘சென்னையில் இதுவரை பதிவு செய்ய விண்ணப்பிக்காத விடுதிகள் மீது தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டபின் நடவடிக்கை எடுக்கப்படும்

மேலும் பதிவு செய்ய இதுவரை 1,046 விண்ணப்பங்கள் பெறப்பட்டன; 7 விடுதிகளுக்கு உரிமம் தரப்பட்டுள்ளது, 48விடுதிகளுக்கு தற்காலிக உரிமம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

Leave a Reply