பணத்தை பிரித்து தருவதில் பா.ஜ.க.வினர் மோதல்: சென்னையில் பரபரப்பு

சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பாரதிய ஜனதா கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அக்கட்சியினர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரச்சாரத்துக்கு அழைத்து வரப்பட்ட பொதுமக்களுக்கு பணத்தை பிரித்து தருவதில் பா.ஜ.க.வினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்த மோதலின் போது சிலர் பிளேடால் கிழித்ததில் பா.ஜ.க நிர்வாகி ரமேஷ் காயம் அடைந்தார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply