பணத்தை நிரப்பிவிட்டு பூட்ட மறந்த ஏடிஎம் ஊழியர்கள்: சென்னையில் பரபரப்பு

தகுந்த பாதுகாப்புடன் இருக்கும் ஏடிஎம்களிலேயே கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வரும் நிலையில் ஏடிஎம்-இல் பணத்தை நிரப்பிவிட்டு பூட்டாமல் வந்த ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை யானைக்கவுனியில் இந்தியன் வங்கி ஏ.டி.எம்.மில் நேற்று இரவில் பணத்தை நிரப்பிய ஊழியர்கள் ஏ.டி.எம் இயந்திர கதவை பூட்டாமல் சென்று விட்டனர். அதிர்ஷ்டவசமாக கொள்ளையர்கள் யாரும் பார்க்காததால் பல லட்சம் ருபாய் பணம் தப்பியது

இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த வங்கி அதிகாரிகள் ஏடிஎம்-ஐ பூட்ட நடவடிக்கை எடுத்தனர். கவனக்குறைவாக பணிசெய்த ஊழியர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

Leave a Reply