பச்சிளங்குழந்தையை தவிக்க விட்டுச்சென்ற தாய்! ஆதரவு தந்த ஆட்டோ டிரைவர்
தாய் என்றாலே அன்பே உருவானவர் என்று தான் உலகில் உள்ள அனைவரும் நம்பும் ஒரு விஷயம். ஆனால் ஒருசில தாய்மார்கள் பெற்ற குழந்தையை இரக்கமின்றி தவிக்கவிட்டு செல்கின்றனர்.
பெங்களூரை சேர்ந்த ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணியாக அனாதையாக இருந்துள்ளார். அவர் மீது இரக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் முண்ட்ரப்பா, அந்த பெண்ணை தனது ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
ஆனால் குழந்தை பிறந்தவுடன் அந்த பெண் குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு மருத்துவமனையில் இருந்து யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டார். இதனையடுத்து மருத்துவமனைக்கு தனது சொந்த பணத்தில் இருந்து பில்கட்டிய ஆட்டோ டிரைவர் அந்த குழந்தையையும் தானே வளர்க்க முடிவு செய்து தத்தெடுத்து கொண்டார். இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.