பக்ரீத் பண்டிகைக்கு புத்தாடை வாங்கி தராத மனைவியை முத்தலாக் செய்த கணவர்
உபி மாநிலத்தில் புத்தாடை வாங்கி தர மறுத்த மனைவிக்கு சிறையிலிருக்கும் கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து அளித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் பெண்ணின் கணவர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். சிறையிலிருக்கும் கணவர் தனக்கு பக்ரீத் பண்டிகைக்காக புத்தாடை எடுத்து வரும்படி மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் மனைவியால் கணவருக்கு புத்தாடை வாங்கி செல்ல முடியவில்லை. இதனை அடுத்து இந்தப் பெண்ணிற்கு அவருடைய கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் செய்த புகாரின் அடிப்படையில் கணவர் மீது போலீசார் வழக்கு தொடுத்துள்ளனர். இஸ்லாமிய பெண்களின் திருமணத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த முத்தலாக் தடை சட்டம் இயற்றிய பிறகு பதிவு செய்யப்படும் 8ஆவது வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.