‘நேர் கொண்ட பார்வை: முதல் மூன்று நாட்களில் 8 காட்சிகள்
தமிழகத்தில் 24 மணி நேரமும் திரையரங்குகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதி அடுத்து அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தை தனது திரையரங்கில் எட்டு காட்சிகள் திரையிட திட்டமிட்டுள்ளதாகவும் விடிய விடிய அஜித்தை ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம் என்றும் சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கின் உரிமையாளர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் மாஸ் நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் படங்கள் ரிலீஸாகும்போது மட்டுமே 24 மணி நேரமும் தியேட்டர்கள் இயங்க வாய்ப்பு உள்ளதாகவும், மற்ற நாட்களில் வழக்கம்போல் 4 காட்சிகள் மட்டுமே திரையிடப்படும் என்றும் பெரும்பாலான திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.