6 பேர் கைது

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒருவரை நேபாளத்திற்கு எதிராக கோஷம் போடச் சொல்லி ஒரு கும்பல் வற்புறுத்தியது. அவர் மறுக்கவே அவருக்கு மொட்டை அடித்து, உச்சந்தலையில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என அந்த கும்பல் எழுதியது

இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து இந்த வீடியோவை பதிவிட்டதற்காக ஆறு பேரை வாரணாசி போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் நேபாள பிரதமர் ஓலி, இந்துக்களின் கடவுளான ராமர் நேபாளத்தில் பிறந்ததாகவும், உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் அமைந்திருப்பதாகவும் கூறினார்.

பிரதமர் ஒலியின் இந்த கருத்து இரு நாடுகளுக்கிடையேயும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாள பிரதமரின் இந்த கருத்துக்கு இந்தியாவில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply