நெல்லை கண்ணன் விவகாரம்: பாஜக போராட்டம் நடத்திய அதே இடத்தில் விசிக போராட்டம்!

சமீபத்தில் நெல்லை கண்ணன், முஸ்லீம் அமைப்பு ஒன்று நடத்திய கூட்டம் ஒன்றில் பேசுகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இதனால் பாஜகவினர் பொங்கி எழுந்து அவரை கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினர்

நேற்று சென்னை மெரினாவில் நடந்த இந்த போராட்டத்தில் எச் ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
இதனையடுத்து நெல்லை கண்ணனை விடுதலை செய்ய வேண்டும் என்று நேற்று பாஜகவினர் போராட்டம் நடத்திய அதே இடத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தமிழர் வாழ்வுரிமை தலைவர் வேல்முருகன் உள்பட பலர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply