நெல்லையில் பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை!

நெல்லை டவுண் பகுதியில் பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நெல்லை பழைய பேட்டை சர்தார்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுடலை நேற்று நெல்லை டவுண் ஆர்ச் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென 2 மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு மாயமாகிவிட்டனர்

இந்த கொலை குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த போலீசார் சுடலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து சர்தார்புரம் பகுதியச் சேர்ந்த முருகன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply