நெருப்புடன் விளையாடுகிறீர்கள்: நீதிபதிகள் கடும் எச்சரிக்கை
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த் வரும் நீதிபதிகள், ‘பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் நீதித்துறையை ஒருபோதும் கட்டுப்படுத்தி இயக்க முடியாது என்றும், நெருப்புடன் விளையாடுகிறீர்கள் எனவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவரது அலுவலகத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், பாலியல் அத்துமீறல் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகார் தமது நேர்மைக்கு விடப்பட்ட சவால் எனக் கூறிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான அருண் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் ரோஹிந்தன் நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.
இந்த விசாரணையில் தான் நீதிபதிகள் இந்த கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.