நீ ஒரு திராவிட எச்சை: நடிகை கஸ்தூரி ஆவேசம்

கடந்த சில நாட்களாக திருவள்ளுவர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பாஜகவினர் மற்றும் திராவிட கட்சியினர்களால் கூறப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை நடிகை கஸ்தூரி தெரிவித்து வருகிறார்.

இதுகுறித்து டுவிட்டர் பயனாளி ஒருவர் கருத்து தெரிவித்தபோது, ‘உன் சங்கராசாரிக்கிட்ட போய் கேளு மேன்!! “தீக்குரலை சென்றோதோம்” என ஆண்டாள் பாசுரத்தில் சொன்னதை தீக்குறளை சென்றோதோம் என கூறியதாய் திரிச்சு சொன்னவன் அவன்! அறம், பொருள், இன்பம் பற்றி மட்டும் பேசி ‘வீடு’ பற்றி பேச திருகுறள் நீசநூல் கோவில்களில் ஓத கூடாது…அதே நாய் தெய்வத்தின் குரலில்!

இந்த கருத்துக்கு ஆவேசமாக பதிலடி கொடுத்த கஸ்தூரி, ‘ஒரு புனிதரை காலம் சென்றவரை நாய் எனும் சாக்கடைவாயே. என்னதான் பெரியாரிஸ்ட்டா இருந்தாலும் அடிப்படை நாகரிகம், மரியாதை பேச்சில் இருக்கும் என்று நம்பினேன். எதிரிக்கு கூட மரியாதை தருவதே தமிழன் மாண்பு. அதெல்லாம் இல்லாத நீ ஒரு திராவிட எச்சை’ என்று குறிப்பிட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply