நீரில் மூழ்கிய நண்பரை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த இளைஞர்கள்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில் நீரில் குளித்த வாலிபர் ஒருவர் நீரில் மூழ்கியபோது அவருடைய நண்பர்கள் அவரை காப்பாற்றாமல் செல்போனில் வீடியோ எடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கர்நாடகாவில் உள்ள கல் குவாரி ஒன்றில் இளைஞர்கள் சிலர் நேற்று கல் குவாரிகள் தேங்கியிருந்த நீரில் குளிக்கச் சென்றனர். அப்போது குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் கிட்டத்தட்ட கரை அருகில் வந்தபின் திடீரென சமநிலை தவறியதால் நீந்த முடியாமல் திணறினார்

ஆனால் அதனை செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்த அவருடைய நண்பர்கள், அந்த நபர் விளையாட்டுக்காக செய்வதாக நினைத்து தொடர்ந்து செல்போனில் வீடியோ எடுப்பதையே குறியாக இருந்தனர்

இந்த நிலையில் அந்த வாலிபர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த வீடியோ க்கு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply