நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: தரமபுரி மருத்துவ மாணவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டமா?

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த தர்மபுரி மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் விசாரணைக்கு பயந்து வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக ஏற்கனவே உதித் சூர்யா என்ற மருத்துவக்கல்லூரி மாணவரும் அவருடைய தந்தையும் மட்டுமின்றி கோவையில் மூன்று மாணவர்களும் அவர்களுடைய தந்தைகளும் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த தகவல்கள் நீட் தேர்வின் லட்சணத்தை வெளிகாட்டி வருகிறது

இந்த நிலையில் தற்போது தர்மபுரியில் உள்ள தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததோடு இதுகுறித்த விசாரணைக்கு பயந்து தலைமறைவாகிவிட்டதாகவும் அந்த மாணவரின் பெயர் இர்பான் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply