shadow

நிலவில் காலடி எடுத்து வைத்த நான்காவது வீரர் மரணம்

முன்னாள் அமெரிக்க விண்வெளிவீரரும், நிலவில் காலடி எடுத்து வைத்த நான்காவது மனிதருமான ஆலப் பீன் என்பவர் காலமானார். இவருக்கு வயது 86. கடந்த சில வருடங்களாக உடல்நலமின்றி அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இவர் காலமானார்.

கப்பற்படை கேப்டனாக தனது வாழ்க்கையை துவங்கிய ஆலன் பீன், ஒரு மிகச்சிறந்த ஓவியர். கடந்த1969ல் பீன் நிலவுக்குச் சென்றார். நிலவில் காலடி பதித்த நான்காவது நபர் என்ற பெருமையை பெற்றவர் ஆலன் பீன்.
இவரது இழப்பை ஈடு செய்யமுடியாது என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் நாசா இவரது மறைவிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது.

Leave a Reply