நியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவம்: 9 இந்தியர்களை காணவில்லை!
நியூசிலாந்து நாட்டில் இன்று காலை 2 மசூதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த நிலையில் அந்த தாக்குதலின்போது அந்த மசூதிகளில் சுமார் 300 பேர் இருந்ததாக கூறப்படுகிறது
மசூதிக்குள் புகுந்த மர்ம நபர் நடத்திய திடீர் துப்பாக்கி சூடு தாக்குதலில் இதுவரை மொத்தம் 49 பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த தாக்குதல் தொடர்பாக அந்நாட்டு போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை நடத்தியவன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரண்ட்டன் என்பதும் அவன் நாளை அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட உள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிறகு 9 இந்தியர்களை காணவில்லை என்ற திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறுகையில், நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 இந்தியர்கள் இறந்துள்ளனர். மேலும் ஒருவர் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார் என்று கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.