shadow

நித்யா பொய்ப்புகார் கொடுத்துள்ளார்: தாடி பாலாஜி விளக்கம்

காமெடி நடிகரும், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான தாடிபாலாஜி அந்நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்த நிலையில் தற்போது அவர் மீண்டும் குடித்துவிட்டு வந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை தாடி பாலாஜியின் மனைவி கொடுத்த நிலையில் இந்த புகாருக்கு தாடி பாலாஜி தற்போது விளக்கம் அளித்துள்ளார். தான் குடித்து விட்டு தகராறு செய்ததாக நித்யா குறிப்பிடும் நாளில் வெளியூர் படப்பிடிப்பில் இருந்ததாகவும், இதிலிருந்தே இது பொய் புகார் என்றும் விளக்கம் அளித்துள்ள தாடி பாலாஜி இந்த வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply