shadow

நிதிஷ்குமாருக்கு கிடைத்த அம்பு: உற்சாகத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியே உண்மையான ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி என்றும், அந்த கட்சிக்கே அம்பு சின்னம் வழங்கப்படுவதாவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு நிதிஷ் குமாருக்கு எதிராக அணி திரட்டி வந்த சரத் யாதவுக்கு ஏமாற்றமாக உள்ளது.

பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால் நிதிஷ் குமாருக்கு ஐக்கிய ஜனதா தள சின்னமான அம்பு சின்னத்தை வழங்கி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கிட்டத்தட்ட இதே பிரச்சனைதான் தமிழகத்தில் அதிமுக கட்சிக்கும் இருப்பதால் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு உள்ள ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி உற்சாகத்தில் உள்ளது.

Leave a Reply