இரண்டு மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் காரணமாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த புயலால் மும்பையில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

ஏற்கனவே மும்பை உள்பட மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிசர்கா புயல் அம்மாநில மக்களை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுவதால் அம்மாநில மக்களிடையே பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

இந்த புயல் மும்பை மட்டுமின்றி மகாராஷ்டிர மாநிலத்தின் பெருவாரியான பகுதிகளில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Leave a Reply