நாளை பள்ளிகள் திறப்பு: பழைய பஸ் பாஸ்களை பயன்படுத்தலாம் என அறிவிப்பு

நாளை தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ்கள் வழங்கப்படும் வரை பழைய பஸ் பாஸ்களை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், பழைய பாஸ் இல்லாவிட்டாலும் மாணவர்கள் சீருடையில் இருந்தால் அவர்களிடம் கட்டணம் கேட்க வேண்டாம் என்றும் தமிழக அரசின் போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது

இந்த நிலையில் மாணவர்களுக்கு நாளையே புத்தகங்கள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசின் கல்வித்துறை அறிவித்துள்ளது

Leave a Reply