நாளை எஸ்கே 15 படத்தின் டைட்டில் அறிவிப்பு: ரசிகர்கள் குஷி

சிவகார்த்திகேயன் நடித்த ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இந்த படம் வரும் மே 1ஆம் ரீலீஸாகவுள்ள நிலையில் அவர் தற்போது 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒன்று ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படம், இரண்டாவது ‘இரும்புத்திரை’ இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஒரு படம், மூன்றாவது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் என மூன்று படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் – பிஎஸ் மித்ரன் இணைந்த ‘எஸ்.கே 15’ திரைப்படத்தின் டைட்டில் நாளை அறிவிக்கப்படவுள்ளது. இதனை கேஜேஆர் ஸ்டுடியோ நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது. நாளை பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கும் நாள் என்றும், பூஜையின்போதே இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படவிருப்பதாகவும் தெரிகிறது.

Leave a Reply